உயிரின் இருண்ட முடுக்குகளில்
உறைந்திருக்கும் பறவை வெளியேறிய ஓர் இரவு!
ஆன்மாவில் தங்கிவிட்ட பிணுக்குகளை
கொத்தித்தின்னத் துவங்கிய நேரம் !
என்னை மன்னிக்க முடியாத நான்,
கடந்து போய்விட்ட நடந்து முடிந்தவைகளின்
மிச்சங்களில்
திறந்த கண்களுடன் புரண்டுகொண்டிருந்தேன் !
நேற்று இன்று என்று பிரித்தறிய முடியா வெளியில்
மிதந்து கொண்டிருந்தோம்
நானும் நான் அல்லாதவர்களும்!
பிணம் கொத்தும் கழுகாய் ஆன்மாவின் அழுக்கைத்
தின்று கொண்டிருந்தது பறவை!
இலகுவாகிவிடும் விரசத்தில்
இறையிட்டுக்கொண்டிருந்தேன்
தூக்கமில்லா இரவில் துணைக்கு வந்த பறவைக்கு!
பிணுக்குகளை மட்டுமல்லாமல்
உயிரின் துணுக்குகளையும்!