Sunday 17 February 2013




நடக்கிறேன்,

உடன் நடக்கிறாய்...

நிற்கிறேன் ,

உடனே நிற்கிறாய்...

உனை நான் பார்க்க,

எனை நீ பார்க்கிறாய்...

நீ அழகென நான் பார்த்தால்,

நான் அழகென உணர வைக்கிறாய் ...

காதலிக்கிறேன்,

காதலில் கரைகிறாய்...

சண்டையிட்ட நண்பனைப் போல ,

மறைந்து சிரிக்கிறாய்...

நேரில் முறைக்கிறாய்...

நான் எதிர்நோக்கிக் காத்திருக்க,

நீ எட்டிப் பார்த்துக் கண்ணடிக்க என

நானும் நீயுமாய் சேர்ந்து 

இனிக்கவைக்கும் இந்த இரவு 

நீள வழியுண்டா ?

சொல் நிலவே !!

2 comments: